8 உடல் உறுப்புகள் தானம்.. இறந்தும் 7 பேரை வாழவைக்கும் கேரள சமையல்காரர்..சென்னைக்கு பறந்து வந்த இதயம்
திருவனந்தபுரம்: இந்த பூமியில் வாழும் சில மனிதர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வகையில் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏழை, எளியவர்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் கொடுத்து புண்ணியம் சேர்த்து வருகின்றனர்.
ஆனால் இவற்றை விட மிகப்பெரிய புண்ணியத்தையும் சிலர் செய்து வருகின்றனர். அது தான் உடல் உறுப்புகள் தானம். ஒருவர் இறந்த பிறகும் அவரது உடல் உறுப்புகள் பலரை வாழச் செய்து வருகிறது. இந்த வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்து ஏழு பேருக்கு புது வாழ்வு அளித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஒருவர். இதனை பற்றி காண்போம்.

வளைகுடா நாட்டில் வேலையை இழந்தார்
கேரள மாநிலம் கிளிகொல்லூரில் உள்ள தொடியில் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வினோத்(54). வளைகுடா நாட்டில் சமையல்காரராக வேலை இழந்த வினோத் கொரோனா காரணமாக வேலையை இழக்க நேரிட்டது. இதனை தொடர்ந்து சொந்த ஊர் வந்து வசித்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. மகள்கள் கீது மற்றும் நீது. வினோத் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

விதி விளையாடியது
வேலை பறிபோனதால் ஏழ்மையில் வசித்து வந்த வினோத்தின் குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கடந்த மாதம் டிசம்பர் 2-ம் தேதி அன்று . வினோத் தனது மகள் கீதுவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது விதி விளையாடியது. தனியார் பேருந்தின் பின்புறம் பைக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தந்தையும், மகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்
இதில் மகள் காயத்துடன் சிகிச்சை பெற்று வர, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வினோத் மூளைச்சாவு அடைந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் முழ்கியது. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் வினோத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் அவரால் பலபேர் உயிர் வாழ்வார்கள் என்று டாக்டர்கள் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். வினோத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார்.

8 உடல் உறுப்புகள் தானம்
இதனை தொடர்ந்து வினோத்தின் உடலில் இருந்து 8 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எட்டு உறுப்புகள் எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதயம், இரண்டு, சிறுநீரகம், கைகள், தோள்பட்டை உள்பட 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. வினோத்தின் தோள்பட்டை உள்பட இரு கைகளும் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு தானம் செய்யப்பட்டன.

சென்னைக்கு பறந்து வந்த இதயம்
திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒரு சிறுநீரகம் வழங்கப்பட்டது. கண்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய கண் மருத்துவ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதேபோல் மற்றொரு சிறுநீரகம் மற்றும் இதயம் சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்தது. இதில் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்றது. கிம்ஸ் மருத்துவமனைக்கு மற்றொரு சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. தான் உயிரிழந்தாலும் தன்னுடைய உடல் உறுப்புகள் மூலம் சுமார் 7 பேரை வாழ வைக்க போகிறார் வினோத்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications