உதயநிதி பட நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்.. டாட்டூ போட சென்றபோது ரசிகர் செய்த செயல்! ஷாக்
திருவனந்தபுரம்: உதயநிதி ஸ்டாலினுடன் நிமிர் படத்தில் நடித்த நடிகை நமிதா பிரமோத்திடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். டாட்டூ போடப் போவதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டுவிட்டு, ஸ்டூடியோவுக்கு சென்றபோது டாட்டூ போடவேண்டாம் என்று கூறி ரசிகர் ஒருவர் நடிகையை தொட்டு அத்துமீறியுள்ளார்.
டாட்டூ போடப்போவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதோடு, அந்த கடை மற்றும் தேதியையும் குறிப்பிட்டு இருந்ததால், நடிகையை பின் தொடந்து டாட்டூ போட வேண்டாம் என சொல்லி ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த இளைஞர்.

உதயநிதி ஸ்டாலின் பட நடிகை
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நமிதா பிரமோத். கேரளாவில் டிராபிக் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மலையாளத்தில் படங்களில் நடித்தார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக என் காதல் புதிது, உதயநிதி ஸ்டாலினுடன் நிமிர், அவர் பெயர் ரஜினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரளம் மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர், மலையாள திரைப் படங்கள் மட்டுமின்றி, ஏராளமான தொலைக் காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் பிரபலமான நடிகை என்பதால் இவரை சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். குறிப்பாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பலரும் பின் தொடர்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு
நடிகை நமிதா பிரமோத்தும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை நமிதா பிரமோத், "டாட்டூ" போட்டுக்கொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டார். அப்போது அந்த "டாட்டூ" போடப்போகும் ஊர், நேரம், நாள் உள்ளிட்டவற்றையும் பதிவிட்டு இருந்தார். அதோடு அவர் கூறிய அதே தேதியில் சம்பந்தப்பட்ட ஊருக்கு சென்று டாட்டூ போடுவதற்காக ஸ்டூடியோ சென்று இருக்கிறார்.
இதனை கவனித்த இளைஞர் ஒருவர் நடிகையிடம் நெருங்கி சென்றார். அவரை பார்த்து, நான் உங்கள் ரசிகர்.. நீங்கள் டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது.. என்றுசொல்லியிருக்கிறார். ஆனால் நடிகை அதை கண்டுகொள்ளாமல் சென்று இருக்கிறார். அப்போது அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது நடிகை, "டாட்டூ" போட்டுக்கொள்வது தனது தனிப்பட்ட விஷயம் என சொல்லிவிட்டு வேகமாக நடக்க தொடங்கினார்.
நடிகையை தொட்டு அத்துமீறிய இளைஞர்
ஆனால் அந்த இளைஞர் நடிகையை செல்ல விடாமல் தடுத்து இருக்கிறார். மேலும் நடிகை தொட்டு அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்த நடிகை பாலாரி வட்டம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "டாட்டூ" போடுவதற்காக சென்ற தன்னை, வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தியதோடு, தன்னை மிரட்டியதாகவும், தவறான முறையில் தொட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகை சொன்ன இடத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் அவரது பெயர் விபின் என்பதும், எர்ணாகுளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. நடிகையிடமும் நீங்கள் பிரபலம் என்பதால் தனிப்பட்ட விஷயத்தினை வெளிப்படையாக பதிவிட வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இளைஞர் விபினை போலீசார் கைது செய்தனர். நடிகையை தொட்டு அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications