சபரிமலை பொன்னம்பலமேட்டில் தடையை மீறி சிறப்பு பூஜை.. பக்தர்கள் அதிர்ச்சி.! ஒருவர் மீது வழக்குப்பதிவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் தடையை மீறி பொன்னம்பலமேட்டிற்கு சென்று சிலர் சிறப்புப் பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் குவிந்தே இருப்பார்கள். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க உலகெங்கும் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
இடையில் கொரோனா காலத்தைத் தவிர சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் கார்த்திகை மாதம் என்றால் நாடு முழுக்க இருக்கும் பக்தர்கள் அங்கே செல்வது வழக்கம்.

சபரிமலை ஐயப்பன்: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனை தரிசி உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் குவிந்தே இருப்பார்கள். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க உலகெங்கும் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.ப்பார்கள். குறிப்பாகத் தமிழ்நாடு ஆந்திராவில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் அங்கே செல்வார்கள்.
அங்கே சபரிமலை ஐயப்பன் கோயிலைச் சுற்றி வனப்பகுதியே இருக்கிறது. அந்த வனப்பகுதிக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையில் முக்கிய மூலஸ்தானமாக கருதப்படும் பொன்னம்பலமேடு பகுதிக்கு யாரும் செல்ல அனுமதி இல்லை.
பொன்னம்பலமேடு: பந்தல ராஜாவின் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு சாத்தி வழிபடும் போது, பொன்னம்பலமேடில் ஜோதியாக அவர் காட்சி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே பொன்னம்பலமேட்டிற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. கோயில் பூசாரிகள் சிலரைத் தவிர அங்கே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும், வன விலங்கு நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறையும் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், தடையை மீறி சிலர் பொன்னம்பலமேடு பகுதியில் ஜோதி தெரியும் இடத்திற்கு சென்றுள்ளனர். சட்டவிரோதமாக அங்கே சென்ற 5 பேர் விசேஷ பூஜைகளைச் செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இதனிடையே கோயில் மரபுகளை மீறி அத்துமீறி அங்கே சென்று விஷேச பூஜை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
கடும் நடவடிக்கை: அதன்படி, பொன்னம்பலமேட்டில் சட்டவிரோதமாக நுழைந்ததாக நாராயணன் மீது வனத்துறை ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.

இணையத்தில் பரவும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகச் சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில் பேசும் நபர் தமிழில் பேசிய நிலையில், அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
-
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications