Fox Attack in Kerala: வீட்டு திண்ணையில் நடந்த வேட்டை முயற்சி.. பள்ளி சிறுவனை பதம் பார்த்த நரி! ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த சிறுவனை நரி ஒன்று கடித்து குதற முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
கண்ணூர் மாவட்டம் மாட்டூல் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று மாலை வீட்டு அருகே சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நாய் போன்ற ஒரு உருவம் அலைந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் நாய்கள் சைஸில் சிறியவையாக இருக்கும். இது கொஞ்சம் பெரிதாகவும், வால் முடி அடர்த்தியானதாகவும் இருந்திருக்கிறது. அந்த உருவம் தங்களை நெருங்கி வரவே, வருவது நரி என சிறுவர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.

ஆனால் நரி அவர்களை விடாமல் துரத்தி வந்திருக்கிறது. சிறுவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று விடவே, திண்ணையில் அமர்ந்திருந்த சிறுவனை நரி நோட்டம் விட்டிருக்கிறது. சிறுவன் அலர்ட் ஆவதற்குள் சட்டென சிறுவனின் காலை கடித்து இழுத்திருக்கிறது. சிறுவன் கூச்சலிடவே, சிறுவனின் தாய் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அடித்து நரியை விரட்ட முயன்றிருக்கிறார். ஆனால் நரி பிடியை தளர்த்தவில்லை. சிறுவனின் தாயும் விடாமல் தாக்கவே, நரி வேறு வழியின்றி விட்டுவிட்டு ஓடியிருக்கிறது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகின்றன. தமிழ்நாட்டில் எப்படி நாய்க்கடி குறித்த அச்சம் இருக்கிறதோ, அதேபோல கேரளாவில் நரிக்கடி குறித்து அச்சம் இருக்கிறது. நேற்று நடந்த சம்பவம் அரிதானது அல்ல. இதுபோல இயல்பாக பல சம்பவங்கள் நடக்கின்றன. சமீப நாட்களாக மாட்டூல் மற்றும் சேலேரி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் நரி கடித்து 6 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேர் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு வயதானவர் கண்ணில் காயம் அடைந்ததால், அவர் பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நரி கடியால் ரத்த காயம் ஏற்படுவதை தாண்டி மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. அதாவது நரி கடிப்பதன் மூலம் ரேபிஸ் நோய் பரவும். ரேபிஸ் உயிர்கொல்லி நோயாகும். கேரளாவில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் ரேபிஸ் அச்சம் குறைவு. ஆனால் நரிகளை பிடித்து இப்படி தடுப்பூசி போட முடியாது. ஏனெனில் அவை பெரும்பாலான நேரங்களில் காட்டுக்குள் மறைந்திருக்கும். வேட்டையாடும் போது மட்டும் ஊருக்குள் வரும். அதுவும் ஊருக்குள் வருவது எப்போதாவதுதான். வந்தாலும் அதை பிடிக்க முடியாது. எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications