சீக்ரெட் நண்பருடன் தனிமையில் உல்லாசம்! உடலுறவின் போது திடீர் வலிப்பு.. இளம்பெண் துடிதுடித்து மரணம்
திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் இளம் பெண் ஒருவருக்கு திடீரென உடலுறவு சமயத்தில் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் ரீதியிலான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.
அப்படித்தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அதேநேரம் இது விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திரா தலைநகரமாகிறது விசாகப்பட்டினம்.. ஜெகன்மோகன் ரெட்டி போட்ட போடு! பிளான் ரெடி.. விறுவிறு ஏற்பாடு
கேரளா
கேரள மாநிலம் இளம்பள்ளூர் கொட்டங்கரை பகுதியைச் சேர்ந்தவர் உமா பிரசன்னன். 32 வயதான இந்த பெண், தனது இரு மகள்களுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் பிஜு கடந்த 2014இல் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. உமா முன்பு லாட்டரி சீட்டு விற்பனையாளராக இருந்தார். இவர் சமீபத்தில் தான் அந்த நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக சேர்ந்தார். இதனிடையே கடந்த டிச. 29ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
விசாரணை
இதையடுத்து அவரது தாயார் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கீதா மொபைலை தொடர்பு கொண்ட முயன்றதாகவும் இருப்பினும், அது சுவிட்ச் ஆஃப் ஆக இருந்ததாகவும் அவரது தாயார் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கொட்டியம் சந்திப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாசு என்பவரிடம் இருந்து கீதாவின் மொபைலை போலீசார் கண்டுபிட்டதனர். இருப்பினும், அதில் கீதாவின் சிம் இல்லை. இதையடுத்து மொபைலை அவரது தாயிடம் ஒப்படைத்த போலீசார், அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர்.
நிர்வாணமாக கிடந்த உடல்
இந்தச் சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அங்குள்ள செம்மம் முக்கு சாலையில் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்த ரயில்வே குடியிருப்பில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த ரயில்வே குடியிருப்பின் பின்புறத்தில் பெண்ணின் உடல் நிர்வாணமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். நிர்வாணமாகக் கிடந்த உடலில் தலையில் இடப்பக்கம் தலை மற்றும் வலது மார்பகத்தின் கீழும் பத்து சென்டிமீட்டர் நீளத்திற்கு ஆழமான காயங்கள் இருந்தன.
போலீசார்
தரையில் காய்ந்த நிலையில் ரத்தம் காணப்பட்டது. குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, போலீசாருக்கு அங்குள்ளவர்கள் தகவல் கொடுத்திருந்தனர். போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர். அப்போது தான் உயிரிழந்துள்ள இந்த பெண் உமா பிரசன்னன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்து எரியூட்டப்பட்டது. மறுபுறம் கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
கைது
இந்தச் சூழலில் உமா பிரசன்னன் மரணம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அஞ்சலைச் சேர்ந்த நாசு (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் தான் உமாவின் மொபைலும் இருந்தது. உமாவின் மரணத்திற்கு இந்த இளைஞரே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.. அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை போலீசார் நடத்தி வரும் நிலையில், பிரேத பரிசோதனை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே நாசு அன்று என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலமும் அளித்துள்ளார்.
வலிப்பு
அதாவது கடந்த டிசம்பர் 29ம் தேதி கொல்லம் கடற்கரையில் அந்தப் பெண்ணை சந்தித்ததாக நாசு போலீஸில் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் ரயில்வேக்கு சொந்தமான அந்த கைவிடப்பட்ட கட்டிடத்திற்குச் சென்று உடலுறவில் ஈடுபட்டார். உடலுறவின் போது கீதாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அஞ்சிய நாசு, கீதாவை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதாக வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாரை குழப்ப உடலில் பிளேடால் காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.