நள்ளிரவில் பகீர்! "என்ன அடிக்க முதல்வர் ஆள் அனுப்புகிறார்!" கேரள ஆளுநர் பரபர புகார்.. என்ன நடந்தது
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை தன்னை தாக்கச் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லி செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஆரிப் முகமது கான் தனது காரை நிறுத்த சொன்னார்.
கேரள ஆளுநர்: பிறகு காரில் இருந்தபடி மாணவ அமைப்பினரைப் பார்த்து கோபமாக ஏதோ சொன்னார். தொடர்ந்து காரை விட்டு இறங்கிய ஆரிப் முகமது கான், போராட்டம் நடத்தியவர்களை கிரிமினர்கள் என விமர்சித்தார். மேலும், அந்த மாணவர்களை நோக்கிச் சென்ற கேரள ஆளுநர் அவர்கள் எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே கேரள ஆளுநரின் காரை மாணவ அமைப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஆளுநர் தனது காரில் இருந்து இறங்கி அங்கேயே செய்தியாளர்களிடமும் பேசினார். தன்னை தாக்கவும் காயப்படுத்தவும் ஆட்களை அனுப்பி கேரள முதல்வர் பினராயி விஜயன் 'சதி' செய்வதாகப் பரபர குற்றச்சாட்டையும் அவர் சுமத்தினார்.
முதல்வர் சதி: அவர் மேலும் கூறுகையில், "முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் போது இதுபோன்ற போராட்டங்களை அனுமதிப்பார்களா.. முதல்வர் வரும் போது போலீசார் கார் அருகே யாராவது வந்தால் சும்மா இருப்பார்களா.. ஆனால் இங்கே என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.. இதை வைத்துச் சொல்கிறேன் என்னை உடல்ரீதியாகக் காயப்படுத்தச் சதி செய்து இவர்களைக் கேரள முதல்வர் தான் அனுப்புகிறார். திருவனந்தபுரத்தின் சாலைகள் ரவுடிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
முதல்வருக்கும் எனக்கும் எதாவது விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால் அவர் என்னைத் தாக்கச் சதி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. கேரள அரசின் அரசியலமைப்பு இயந்திரம் சீரழிந்து வருவதையே இது காட்டுகிறது. போராட்டக்காரர்கள் தம்மை நோக்கி கறுப்புக்கொடி மட்டும் காட்டவில்லை. இருபுறமும் காரை தாக்கினார்கள்.
பரபர குற்றச்சாட்டு: இதன் காரணமாகவே நான் காரில் இருந்து இறங்கியதும் அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். அருகே இருந்த காரில் தான் ஒளிந்து இருந்தார்கள். ஆனால், முதல்வர் சப்போர்ட் இருப்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று சரமாரியாகச் சாடினார்.

போலீசார் விளக்கம்: ஆரிப் கான் மீது மூன்று இடங்களில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டதாகவும் அதில் இரண்டு இடங்களில் அவரது கார் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாகவும் கேரள ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் கேரள போலீசார் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். ஆளுநரின் வாகனத்தைப் போராட்டக்காரர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மறித்ததாகவும் அதிலும் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்ற இரண்டு சம்பவங்களில், கருப்புக் கொடிகள் மட்டுமே காட்டப்பட்டதாகவும் அதிலும் சுமார் 10-12 பேரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேரளா எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டும் ஆளும் இடதுசாரிகள் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கேரள ஆளுநரை நோக்கித் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் கேரள முதல்வரே தன்னை தாக்கச் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications