நள்ளிரவில் பகீர்! "என்ன அடிக்க முதல்வர் ஆள் அனுப்புகிறார்!" கேரள ஆளுநர் பரபர புகார்.. என்ன நடந்தது
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை தன்னை தாக்கச் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லி செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஆரிப் முகமது கான் தனது காரை நிறுத்த சொன்னார்.
கேரள ஆளுநர்: பிறகு காரில் இருந்தபடி மாணவ அமைப்பினரைப் பார்த்து கோபமாக ஏதோ சொன்னார். தொடர்ந்து காரை விட்டு இறங்கிய ஆரிப் முகமது கான், போராட்டம் நடத்தியவர்களை கிரிமினர்கள் என விமர்சித்தார். மேலும், அந்த மாணவர்களை நோக்கிச் சென்ற கேரள ஆளுநர் அவர்கள் எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே கேரள ஆளுநரின் காரை மாணவ அமைப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஆளுநர் தனது காரில் இருந்து இறங்கி அங்கேயே செய்தியாளர்களிடமும் பேசினார். தன்னை தாக்கவும் காயப்படுத்தவும் ஆட்களை அனுப்பி கேரள முதல்வர் பினராயி விஜயன் 'சதி' செய்வதாகப் பரபர குற்றச்சாட்டையும் அவர் சுமத்தினார்.
முதல்வர் சதி: அவர் மேலும் கூறுகையில், "முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் போது இதுபோன்ற போராட்டங்களை அனுமதிப்பார்களா.. முதல்வர் வரும் போது போலீசார் கார் அருகே யாராவது வந்தால் சும்மா இருப்பார்களா.. ஆனால் இங்கே என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.. இதை வைத்துச் சொல்கிறேன் என்னை உடல்ரீதியாகக் காயப்படுத்தச் சதி செய்து இவர்களைக் கேரள முதல்வர் தான் அனுப்புகிறார். திருவனந்தபுரத்தின் சாலைகள் ரவுடிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
முதல்வருக்கும் எனக்கும் எதாவது விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால் அவர் என்னைத் தாக்கச் சதி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. கேரள அரசின் அரசியலமைப்பு இயந்திரம் சீரழிந்து வருவதையே இது காட்டுகிறது. போராட்டக்காரர்கள் தம்மை நோக்கி கறுப்புக்கொடி மட்டும் காட்டவில்லை. இருபுறமும் காரை தாக்கினார்கள்.
பரபர குற்றச்சாட்டு: இதன் காரணமாகவே நான் காரில் இருந்து இறங்கியதும் அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். அருகே இருந்த காரில் தான் ஒளிந்து இருந்தார்கள். ஆனால், முதல்வர் சப்போர்ட் இருப்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று சரமாரியாகச் சாடினார்.

போலீசார் விளக்கம்: ஆரிப் கான் மீது மூன்று இடங்களில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டதாகவும் அதில் இரண்டு இடங்களில் அவரது கார் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாகவும் கேரள ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் கேரள போலீசார் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். ஆளுநரின் வாகனத்தைப் போராட்டக்காரர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மறித்ததாகவும் அதிலும் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்ற இரண்டு சம்பவங்களில், கருப்புக் கொடிகள் மட்டுமே காட்டப்பட்டதாகவும் அதிலும் சுமார் 10-12 பேரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேரளா எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டும் ஆளும் இடதுசாரிகள் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கேரள ஆளுநரை நோக்கித் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் கேரள முதல்வரே தன்னை தாக்கச் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
கேரளா சட்டசபை தேர்தல்.. குட்டி மாநிலத்தில் இத்தனை கோடிஸ்வரர்களா? வேட்பாளர்களின் பின்னணி -
யார் இந்த அஸ்வினி அஷ்.. இன்ஸ்டாவில் வீடியோ சப்ஸ்கிரிப்சனால் மாதம் 1.2 கோடி சம்பாத்தியம்? -
ஹாட்ரிக்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கேரள சட்டசபை தேர்தல் ரொம்ப முக்கியமானது ஏன் தெரியுமா? -
1800+ வேட்பாளர்கள், 6.1 கோடி வாக்காளர்கள்.. கேரளா, புதுவை, அசாமில் வாக்குப்பதிவு நிறைவு -
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல்












Click it and Unblock the Notifications