ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. கேரளா சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!
திருவனந்தபுரம்: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஆதரவுடன் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது. உடல் நிலை சரியில்லாததால் இன்றைய கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.

லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அதே நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை அந்தந்த மாநில தேர்தல் ஆணைம் நடத்துகின்றது. இந்த நிலையில் தான் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்ட மத்திய அரசு அதற்கான குழு அமைத்தது. இந்தக் குழு அளித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டத்தை கொண்டு வர வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்களில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இவை அனைத்தும் எந்த சிக்கலும் இன்றி சுமூகமாக முடிந்தால் 2029ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலுடன் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், கேரள அமைச்சர் ராஜேஷ் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து அவையில் விவாதங்களுக்கு பிறகு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. முதல்வர் பினராயி விஜயன் இன்றைய அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை.
உடல் நல பிரச்சினைகளால் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது. தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை கோரியது. இந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படது.
-
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications