கேரளா ரயில் தீ வைப்பு- மாவோயிஸ்டுகள், மத பயங்கரவாதிகள் சதியா? குழப்பும் இந்தி 'கோட் வேர்ட்'!
திருவனந்தபுரம்: கேரளா ரயிலில் பயணிகளை தீ வைத்து படுகொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் ரயில் நிலையங்களைக் குறிப்பிட்டு கணித குறியீடுகளுடனான பேப்பர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இந்த பேப்பர், சதிகாரர்களின் கோட் வேர்டாக இருக்குமோ? என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Recommended Video
கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஆலப்புழா- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்த நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் சக பயணி மீது தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் பயணிகள் 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது தண்டவாளத்தில் 3 உடல்கள், தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. தவ்பீக், ரெஹானா மற்றும் ஒரு குழந்தை ஆகியோரது உடல்களே தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டன.

ரயிலில் பயணம் செய்த நபர், எதிரே உட்கார்ந்திருந்த தவ்பீக், ரெஹ்னா உள்ளிட்டோர் மீது ஸ்பிரே மூலம் பெட்ரோல் தெளித்துள்ளார். பின்னர் அவர்கள் மீது தீ வைத்து விட்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். அந்த ரயிலை பின் தொடர்ந்து டூ வீலரில் வந்தவருடன் அந்நபர் தப்பி சென்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளில் கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை வரிசையாக குறிப்பிட்டு ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்ட ஒரு பேப்பர் கைப்பற்றப்பட்டது. அதில் கணித குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தில் மலையாளத்தில் எழுதப்பட்டாமல் இந்தி, ஆங்கிலத்தில் ஏன் எழுதப்பட்டது என்பது ஒரு கேள்வி. அதனால் வட இந்தியாவை சேர்ந்த நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
மேலும் மாவோயிஸ்டுகள் அல்லது மத பயங்கரவாதிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் ஓடும் ரயிலில் இரவு நேரத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications