Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க யாரும் வாக்களிக்க கூடாது.. துப்பாக்கியோடு வந்த மாவோயிஸ்டு.. வயநாட்டில் தமிழர்களுக்கு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் வசிக்கும் தமிழர்கள் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் மிக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Maoist threaten Tamilians not to vote in Kerala Wayanad Lok Sabha elections 2024

இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,633 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,206 வேட்பாளர்கள், மணிப்பூர் பிசியில் இருந்து 4 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அஸ்ஸாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்தியப் பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), உத்தரப் பிரதேசம் (8), ராஜஸ்தான் (13), மற்றும் மேற்கு வங்கம் (3),கேரளா 20, ராஜஸ்தானில் 13தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கேரளா மிரட்டல்; கேரளாவில் 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் வசிக்கும் தமிழர்கள் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சென்று துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள் விடுத்துள்ளனர். நீங்க யாரும் கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என்று துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நான்கு மாவோயிஸ்டுகள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதத்துடன் சென்று.. இங்கே இருக்குற யாரும் வாக்களிக்க கூடாது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நீங்கள் இங்கே அடிப்படை வசதிகளுடன் வாழ முடியம். மருத்துவமனை, மின்சாரம் எல்லாம் இதுவரை கிடைக்கவில்லை. நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

தேர்தலை புறக்கணியுங்கள். மாணந்தவாடி தல புழா எஸ்டேட் ஊழியர்களுக்கு எந்த வசதியும் இல்லை. உங்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. அரசுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். தேர்தலை புறக்கணியுங்கள்.

இதை மீறி தேர்தலில் வாக்களித்தால் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்று மிரட்டி உள்ளனர். 20 நிமிடம் விடாமல் மாவோயிஸ்டுகள் பேசி உள்ளனர். துப்பாக்கி வைத்தபடி வாக்களிப்பதற்கு எதிராக பேசிவிட்டு சென்றுள்ளனர். கேரளாவில் சில தொகுதிகள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காரணமாக பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. .

நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி தல புழா பகுதியில் உள்ள வயநாடு எல்லைக்கு உட்பட்ட பூத் பகுதிகள் எல்லாம் பதற்றம் நிறைந்த பகுதிகள் ஆகும். இந்த நிலையில்தான் நாளை மறுநாள் அங்கே தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கு கீழ் வரும் பகுதியாகும் இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+