Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் இறந்த பிறகு தம்பதிக்கு திருமண பதிவு! உள்ளூர் நிர்வாகம் செய்த அதிரடி! காரணம் தான் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்த பிறகு தம்பதிக்கு திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று அரசு உள்ளூர் நிர்வாகம் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத நடைமுறை என்று சொல்லும் அளவுக்கு கேரளாவில் உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இறந்த பிறகு தம்பதிக்கு திருமண பதிவு செய்து உள்ளூர் சுய அரசு துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

Marriage registration of deceased couple in Thiruvananthapuram, This is the Reason

கேரள தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள முள்ளூர் பகுதியை சேர்ந்த ஜோல்லி பி தாஸ் என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அங்குள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் நடைபெற்ற இந்த திருமணம் குறித்து உள்ளூர் பஞ்சாயத்தில் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லையாம்.

அதுபோல திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம். இதற்கு இடையில், கடந்த 2012 ஆம் ஆண்டு அஜித் குமார் காலமானார். அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது மனைவியும் உயிரிழந்தார். தாய் தந்தை இருவருமே உயிரிழந்து விட்ட நிலையில் இவர்களது பிள்ளையை ஜோல்லியின் தந்தை பராமரித்து வந்தார். இந்த நிலையில், தனது பேரனின் படிப்புக்காக பெற்றோரின் திருமண சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது.

இருவருமே இறந்து விட்ட நிலையில், திருமண சான்றிற்காக ஜோல்லியின் தந்தை விண்ணப்பித்த போது, இதுபோன்ற ஒரு சான்றிதழை தங்களால் வழங்க முடியாது என்றும் அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி தேவை எனவும் சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து சிறப்பு அனுமதியின் பேரில் இறந்த பிறகும் இந்த தம்பதிக்கு திருமண பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், " இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அனுமதியுடன் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார். முன்னதாக கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றது.

அதாவது, திருமணம் நடைபெற்று 53 ஆண்டுகள் கழித்து தம்பதி இறந்த பிறகு பாஸ்கரன் நாயர் - கமலம் தம்பதியினருக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருமண சான்று இல்லாததால் குடும்ப பென்ஷன் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்களது மகன் கோபகுமார் சிறப்பு அனுமதி கோரி இந்த திருமண சான்றிதழை வாங்கியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+