நிபா வைரஸ்: மக்களே எச்சரிக்கையா இருங்க.. பயப்படாதீங்க.. பதற்றப்படாதீங்க.. கேரள முதல்வர் வேண்டுகோள்!
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை குறித்து பேசப்படுகிறதோ இல்லையோ நிபா வைரஸ் குறித்து தான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில்தான் பரவியது நிபா வைரஸ்.
அப்போது 13 பேரை பலி கொண்டது. 80க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் காய்ச்சலால் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பினர்.

நிபா வைரஸ் உறுதி
இந்நிலையில் இந்த ஆண்டும் கேரளாவை அச்சுறுத்த தொடங்கிவிட்டது நிபா வைரஸ். எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒவருவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
இந்த மாணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

80க்கும் மேற்பட்டோருக்கு நிபா
அந்த மாணவரை தொடர்ந்து 2 செவிலியர்கள் மற்றும் 22 மாணவர்கள் என 80 க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு என மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
|
சுகாதாரத்துறை தயார்
இந்நிலையில் கேரள முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் நிபா வைரஸ் குறித்து கருத்து பதிவிட்டுள்ளது. அதில் ஒருவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள
சுகாதாரத்துறை தயாராக உள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரின் மேற்பார்வையின் கீழ், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
|
பீதியை கிளப்பக்கூடாது
உறுதிப்படுத்தும் செய்தி பீதியை கிளப்பும் வகையில் இருக்கக்கூடாது. சுகாதாரத்துறை கூறும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
|
இம்முறையும் வெற்றி பெறுவோம்
நாங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். மத்திய அரசின் குழு கொச்சி வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ்க்கு எதிராக போரிட்டு நாம் வெற்றி பெற்றோம். இப்போதும் நாம் நிபா வைரஸ்க்கு எதிராக போரிட்டு வெற்றிப்பெற போகிறோம். இவ்வாறு முதல்வர் அலுவலக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயப்பட வேண்டாம்
இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், நிபா வைரஸ் குறித்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் இதுகுறித்து பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருங்கள், நிபா வைரஸை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என கூறியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications