அரசு மரியாதை இல்லை.. 150 கிமீ தூரத்தை கடக்க 28 மணி நேரம்! கேரளாவே திரண்ட உம்மன் சாண்டி இறுதி ஊர்வலம்
திருவனந்தபுரம்: மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடல் அவரது இறுதி விருப்பத்தின்படி அரசு மரியாதையின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. உம்மன் சாண்டி உடலில் தேசியக்கொடி போர்த்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும், அவரது இறுதி ஊர்வலத்துக்கு ஒட்டுமொத்த கேரளாவே திரண்டு அஞ்சலி செலுத்தியது.
உம்மன் சாண்டி மறைவு: கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் அவரது உடல் பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்பு திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன்பிறகு இரவில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டியின் உடல், பின்னர் அங்கிருந்து கேரள மாநில காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊருக்கு இறுதி பயணம்: அதனைத்தொடர்ந்து இரவில் உம்மன் சாண்டியின் உடல் மீண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு கொண்டு செல்ல, அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது. உம்மன் சாண்டியின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேரள அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டது.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றதால் உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஊர்ந்தபடியே சென்றது. இறுதி ஊர்வலமாகச் சென்ற வாகனம் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு புறப்பட்ட உம்மன்சாண்டி இறுதி ஊர்வலம், சங்கனாச்சேரிக்கு நேற்று காலைதான் வந்தடைந்தது.
28 மணி நேரம் ஊர்வலம்: திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை செல்ல உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்திற்கு 28 மணி நேரம் ஆனது. இந்த 150 கி.மீ தூரம் வழக்கமாக சுமார் 3 - 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரம். ஆனால், அதைக் கடக்க 28 மணி நேரம் ஆனதே எந்தளவுக்கு கூட்டம் திரண்டிருந்தது என்பதற்கான சாட்சி.
பின்னர் மாலையில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு உம்மன் சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உம்மன் சாண்டியின் உடல், தேசியக்கொடி போர்த்தப்படாமல் அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை வேண்டாம்: உம்மன் சாண்டியின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கேரள அரசு திட்டமிட்டது. ஆனால், உம்மன் சாண்டியின் கடைசி விருப்பத்தின்படி, எந்தவித அரசு மரியாதையும் இன்றி அவரது உடலை அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் கேரள மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து உம்மன் சாண்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது.

அதன்படி, உம்மன் சாண்டி உடல் அரசு மரியாதை இன்றி, தேசியக்கொடி போர்த்தப்படாமல் உம்மன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உம்மன் சாண்டியின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில ஆளுநர்ர் ஆரிப் முகமது கான், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications