Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வந்தே பாரத்’க்காக பிற ரயில்கள் தாமதம்.. கேரளாவில் மனித உரிமைகள் ஆணையம் போட்ட அதிரடி ஆர்டர்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்கள் நிறுத்தப்படுவது பயணிகளின் உரிமையை மீறும் செயல் என்றும் இது தொடர்பாக ரயில்வே உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் கேரள மனித உரிமைகள் ஆணையம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. சென்னை - நெல்லை, சென்னை - கோவை உள்பட நாடு முழுவதும் 33 வந்தே பாரத் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட அதிவேகத்தில் இயக்கப்படுகிறது.

other trains halt for Vande Bharat train, Kerala Human Rights Commission orders railways to respond

அது மட்டும் இன்றி முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், வைஃபை, அகன்ற ஜன்னல்கள் பயணிகளின் பயண அனுபத்தை சொகுசாக்கும் வகையில் பல வசதிகள் உள்ளன. இதனால், வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்ய பயணிகளும் அதிகம் விரும்புகின்றனர். எனினும், வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாகவும் சில ரயில்களின் நேரமோ மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியதும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடங்களுக்கு முன்பே புறப்படும் என்று ரயில்வே அறிவித்தது. இதனால், வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில்களை ரயில்வே காவு கொடுப்பதாக பயணிகள் விமர்சித்து இருந்தனர். கேரளாவிலும் தற்போது இதே மாதிரியான பிரச்சினை வெடித்துள்ளது. அதாவது, வந்தே பாரத் ரயிலுக்காக குறைந்த அளவு தூரம் செல்லும் சில ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தினசரி வேலைக்கு செல்லும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், இது தொடர்பாக கேரள மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பாலக்காடு ரயில்வே டிவிஷனல் மேனேஜர், பயணிகளின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு தலைவரும் ஜுடிசியல் உறுப்பினருமான கே பைஜூ நாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

வந்தே பாரத் ரயில் இடையூறு இன்றி இயங்குவதற்காக பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோட்டில் சுமார் 1.30 மணி நேரம் கூடுதலாக நிறுத்தப்படும் என ரயில்வே அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. அதேபோல், கன்னூர்- கோழிக்கோடு பயணிகள் ரயில் பல ரயில் நிலையங்களில் வந்தே பாரத் இடையூறு இன்றி செல்வதற்காக நிறுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+