இனிமே என்ன? தெருவுல இறங்குவோம் வாங்க.. சபரிமலை போராட்டத்திற்கு பினராயி பதிலடி!
சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
புகழ்பெற்ற கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்கள் நுழைவிற்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து வருகிறது.
ஆனால் இப்போது வரை அங்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு பதட்டமான சூழ்நிலைதான் நிலவிவருகிறது.
[கடைசியில் கேரளாவிற்கும் இந்த நிலைமையா?.. உ.பி, பீகாரில் நடந்த அதே அரசியல்.. சபரிமலை போராட்டம்! ]

எதிர்ப்பு
கேரளா சபரிமலை போராட்டம், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொஞ்சம் எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு வாரமாக நடந்த போராட்டம், விவரிக்க முடியாத எழுச்சி ஒன்றை கேரளாவில் உருவாக்கி உள்ளது. சபரிமலைக்காக பல மக்கள் இப்படி ஒன்றுகூடுவார்கள் என்று யாருமே நினைக்கவில்லை.

எந்த கவலையும் இல்லை
ஆனால் பினராயி விஜயன் இதை எல்லாம் கண்டுகொண்டது போல தெரியவில்லை. உறுதியாக, என்ன நடந்தாலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார். மேலும் எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் முடிவிற்கு வந்துவிட்டார்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
இந்த நிலையில்தான் நேற்று பெரிய அளவில் போராட்டமும், கலவரமும் சபரிமலையை சுற்றிய பகுதிகளில் நடந்தது. மிகப்பெரிய கலவரமாக மாற இருந்த போராட்டத்தை பினராயி விஜயன் சாமர்த்தியமாக கையாண்டார். தூத்துக்குடி போராட்டம் போல தவறான ஆணைகளை அங்கு ''வட்டாச்சியர்'' வழங்கவில்லை. அதே சமயம் போராட்டக்காரர்களை தேவைப்படும் சமயங்களில் ''லத்தி சார்ஜ்'' கொடுத்து அடக்கியும் வைத்தார்கள். பெரிய கலவரமாக மாற வேண்டியதை ஒருவழியாக சமாளித்தனர்.

வாங்க போய் பேசலாம்
இந்த நிலையில், இந்த போராட்டம் கலவரம் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்க முடிவெடுத்துள்ளார் பினராயி விஜயன். இந்த மாத இறுதியில் இடதுசாரி அமைப்புகள் கேரளா முழுக்க சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்தும் பெண்கள் உரிமை குறித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளது. இதில் முன்னின்று நடத்த போவதே முதல்வர் பினராயிதான். கேரளா முழுக்க, மாவட்டம் மாவட்டமாக சென்று இந்த தீர்ப்பு குறித்து மக்களிடம் பேச இருக்கிறார்கள். இது மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பதிலாக இருக்கும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications