விவசாயிகள்; பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள்.. ராகுலுக்கு பினராயி விஜயன் பதில் கடிதம்
திருவனந்தபுரம்: வயநாட்டில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றாலும், வயநாட்டில் அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதிக்குட்பட்ட பனமரம் என்ற பகுதியில், தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் குமார் என்ற 53 வயதான விவசாயி, மூன்று வங்கிகளில் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வறுமை காரணமாக அவரால் அந்த கடனை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடனை திரும்ப கட்ட சொல்லி வங்கிகள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 25ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த செய்தி வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தியின் காதுகளுக்கு எட்டியது.
இதனால் மனவேதனை அடைந்த அவர், கேரள மாநில முதல்வரான பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் விவசாயி தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தை கேள்விப்பட்டு, தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார். கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயி தினேஷின் குடும்பத்தினருக்கு, தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும் என கோரியிருந்தார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பினராயி விஜயனை வலியுறுத்தினார்.
வங்கி கடனை வசூலிக்கும் முகவர்களால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். கேரள விவசாயிகள் கவுரவத்துடன் வாழ மாநில அரசு கண்டறியும் வழிமுறைகளுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள பினராயி விஜயன், வயநாட்டில் விவசாயி தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார் .
மேலும் விவசாயிகளின் கடன்கள் வசூலிப்பதை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என ராகுலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications