விவசாயிகள்; பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள்.. ராகுலுக்கு பினராயி விஜயன் பதில் கடிதம்
திருவனந்தபுரம்: வயநாட்டில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றாலும், வயநாட்டில் அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதிக்குட்பட்ட பனமரம் என்ற பகுதியில், தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் குமார் என்ற 53 வயதான விவசாயி, மூன்று வங்கிகளில் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வறுமை காரணமாக அவரால் அந்த கடனை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடனை திரும்ப கட்ட சொல்லி வங்கிகள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 25ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த செய்தி வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தியின் காதுகளுக்கு எட்டியது.
இதனால் மனவேதனை அடைந்த அவர், கேரள மாநில முதல்வரான பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் விவசாயி தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தை கேள்விப்பட்டு, தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார். கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயி தினேஷின் குடும்பத்தினருக்கு, தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும் என கோரியிருந்தார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பினராயி விஜயனை வலியுறுத்தினார்.
வங்கி கடனை வசூலிக்கும் முகவர்களால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். கேரள விவசாயிகள் கவுரவத்துடன் வாழ மாநில அரசு கண்டறியும் வழிமுறைகளுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள பினராயி விஜயன், வயநாட்டில் விவசாயி தினேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார் .
மேலும் விவசாயிகளின் கடன்கள் வசூலிப்பதை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என ராகுலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications