வெள்ளத்தில் மிதக்கும் வயநாடு.. சொந்த தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் எம்பி ராகுல்காந்தி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியை அதன் எம்பி ராகுல் காந்தி பார்வையிடுகிறார்.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென் இந்தியாவே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரளத்தில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை போன்று கிட்டத்தட்ட இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வயநாட்டில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இரு நாட்கள் பயணமாக வயநாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட ராகுல்காந்தி நாளை வரவிருக்கிறார். அச்சமயம் அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்வார் என தெரிகிறது.













Click it and Unblock the Notifications