சபரிமலை போராட்டம்.. கேரள தலைநகரில் 10,000க்கும் அதிகமானோரை திரட்டிய பாஜக.. புதிய எழுச்சி?
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அம்மாநில பாஜகவிற்கு புதிய எழுச்சியை அளித்து இருக்கிறது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அம்மாநில பாஜகவிற்கு புதிய எழுச்சியை அளித்து இருக்கிறது.
பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே கேரளாவில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. இதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள்.
|
பாஜக
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை பல்வேறு இந்துத்துவா அமைப்புகள்தான் சேர்ந்து நடத்துகிறது. ஆனால் இதை பாஜகதான் ஒருங்கிணைக்கிறது. இந்த போராட்டத்திற்கு கேரளாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
|
பெரிய ஆதரவு
இந்த போராட்டம் காரணமாக கேரளாவில் பாஜக புதிய பலம் பெற்று இருக்கிறது. நிறைய பேர் பாஜகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இடதுசாரிகள், காங்கிரஸ் தவிர மற்ற பெரும்பாலான அமைப்புகள், பாஜகவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
பெரிய கூட்டம்
இந்த நிலையில் இன்று மட்டுமே 10 ஆயிரம் பேரை கூட்டி இருக்கிறது பாஜக. பல்வேறு இந்துத்துவா அமைப்புக்களை சேர்ந்த இவர்கள் எல்லோரும் பாஜகவை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் எல்லோரும் பாஜக கொடியுடன் மட்டுமே வலம் வந்தனர். இதில் 60 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு வாய்ப்பு
இது பாஜகவிற்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வரிசையாக கேரள வெள்ளம், மாட்டுக்கறி என்று எல்லாவற்றிலும் கேரளாவில் கெட்ட பெயரை எடுத்த பாஜக முதல்முறை இந்த சபரிமலை விஷயத்தில் ஸ்கோர் செய்துள்ளது. அதுவும் பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளனர்.