சர்ச்சையை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி'.. படம் பார்க்கல.. ஆனாலும்.. கேரள ஆளுநர் பரபரப்பு கருத்து
திருவனந்தபுரம்: கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், கேரளாவில் லவ் ஜிகாத் இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம். இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இந்த டீசரில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக அந்த படத்தின் டிரெய்லரில் காட்டப்பட்டு இருந்தது.
கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் தோழிகளை சக முஸ்லிம் பெண் ஒருவர் மூளைச் சலவை செய்து முஸ்லிமாக மதமாற்றம் செய்வதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டுகளும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்தை கடுமையாக சாடி தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறுகையில், மாநிலத்தில் ஏதாவது 'லவ் ஜிகாத்' சம்பவங்கள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
இது குறித்து கேரள ஆளுநர் மேலும் கூறுகையில், "இந்த படத்தை நான் பார்க்கவில்லை. சட்டம் ஒழுங்கை பேணவும் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ளவர்களும் அதை கவனித்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் லவ் ஜிகாத் இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு ஆகும்" என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications