ஆட்சியை கலைப்பதாக பயமுறுத்திய அமித் ஷா.. பினராயி கொடுத்த பதிலடியை பாருங்கள்!
கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் ஷா விடுத்த எச்சரிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் ஷா விடுத்த எச்சரிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.
ஆனால் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள்.
[ரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்?- ராஜபக்சேவை நியமித்தது ஏன்?.. சிறிசேனா பரபரப்பு தகவல்]

கைது செய்தார்
சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 3500 பேர் ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து நிறைய பேர் கைதாகி உள்ளனர்.

கலைக்கப்படும்
இந்த நிலையில் கேரளா சென்றிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் கேரளா அரசு பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் கைது செய்வதை அரசு நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

பதில் அளித்தார்
இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் ''நீங்கள் யார் எனக்கு ஆர்டர் போட. நீங்கள் என்ன சுப்ரீம் கோர்ட்டா. இல்லை நீங்கள் சொன்னதைதான் சுப்ரீம் கோர்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா.? என்னை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறீர்கள். ஒரு பெரிய கட்சியின் தலைவருக்கு எப்படி பேசுவது என்று கூட தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.

ஆனால் என்ன
ஆனால் இந்த பதிலை விட அவர் வேறு ஒரு அதிரடி காட்டி இருக்கிறார். கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்களை கைது செய்தால் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே இன்னும் பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று மட்டும் மொத்தம் 500 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமித் ஷாவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து அங்கு கைது நடவடிக்கை அரங்கேறி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications