ரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்?- ராஜபக்சேவை நியமித்தது ஏன்?.. சிறிசேனா பரபரப்பு தகவல்
Recommended Video

கொழும்பு : பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியது குறித்து அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அதிபராக பதவியேற்று வந்த ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 26-ஆம் தேதி அதிபர் சிறிசேனா பதவியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக சிறிசேனா நியமித்தார்.
இதனால் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ராஜபக்சேவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என ரணில் கோரிய நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிசேனா. ரணிலுக்கான பாதுகாப்பை ரத்து செய்தார்.

அரசியல் நடவடிக்கை
இத்தனை அதிரடி நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களிடம் சிறிசேனா உரையாற்றினார். அப்போது ரணில் பதவி நீக்கத்துக்கு அவரது கர்வமான நடத்தையே காரணம் என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னர் விக்கிரமசிங்கவின் அரசியல் நடவடிக்கைகள் சரியில்லை.

சீரழிவு
இலங்கையின் எதிர்காலத்தை பொழுதுபோக்காகவே நடத்தினார். சாதாரண மக்களின் எண்ணங்களை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஊழல் உள்ளிட்ட காரணங்களால் சிறந்த நிர்வாகத்தை அவர் சீரழித்துவிட்டார்.

சரிவு
கொள்கை முடிவுகள் என்று பார்த்தோமேயானால் எங்கள் இருவருக்கும் இடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டது. ரணிலால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி கவர்னர் அர்ஜுன மகேந்திரன் பத்திர ஊழல் புகாரில் சிக்கினார். இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டது.

கொலை செய்ய சதி
அதுபோல் என்னை கொலை செய்வதற்கு நடந்த சதியிலும் ரணிலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இத்தகைய அரசியல், பொருளாதாரம் மற்றும் கொலை சதிகளுக்கு மாற்றாக என்னிடம் ஒரு நடவடிக்கைதான் இருந்தது. அதுதான் ராஜபக்சேவை பிரதமராக்குவது. அதன்படி அவர் நியமிக்கப்பட்டார் என்று சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications