ரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்?- ராஜபக்சேவை நியமித்தது ஏன்?.. சிறிசேனா பரபரப்பு தகவல்
Recommended Video

கொழும்பு : பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியது குறித்து அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அதிபராக பதவியேற்று வந்த ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 26-ஆம் தேதி அதிபர் சிறிசேனா பதவியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக சிறிசேனா நியமித்தார்.
இதனால் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ராஜபக்சேவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என ரணில் கோரிய நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிசேனா. ரணிலுக்கான பாதுகாப்பை ரத்து செய்தார்.

அரசியல் நடவடிக்கை
இத்தனை அதிரடி நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களிடம் சிறிசேனா உரையாற்றினார். அப்போது ரணில் பதவி நீக்கத்துக்கு அவரது கர்வமான நடத்தையே காரணம் என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னர் விக்கிரமசிங்கவின் அரசியல் நடவடிக்கைகள் சரியில்லை.

சீரழிவு
இலங்கையின் எதிர்காலத்தை பொழுதுபோக்காகவே நடத்தினார். சாதாரண மக்களின் எண்ணங்களை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஊழல் உள்ளிட்ட காரணங்களால் சிறந்த நிர்வாகத்தை அவர் சீரழித்துவிட்டார்.

சரிவு
கொள்கை முடிவுகள் என்று பார்த்தோமேயானால் எங்கள் இருவருக்கும் இடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டது. ரணிலால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி கவர்னர் அர்ஜுன மகேந்திரன் பத்திர ஊழல் புகாரில் சிக்கினார். இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டது.

கொலை செய்ய சதி
அதுபோல் என்னை கொலை செய்வதற்கு நடந்த சதியிலும் ரணிலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இத்தகைய அரசியல், பொருளாதாரம் மற்றும் கொலை சதிகளுக்கு மாற்றாக என்னிடம் ஒரு நடவடிக்கைதான் இருந்தது. அதுதான் ராஜபக்சேவை பிரதமராக்குவது. அதன்படி அவர் நியமிக்கப்பட்டார் என்று சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications