Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி - வாஷிங்டன் இடையிலான ஆயில் டீல் இப்போது இந்தியாவின் மானப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

'யார் வீட்டுச் சொத்தை யார் யாருக்குக் கொடுப்பது?' என்கிற கதையாக மாறியிருக்கிறது அமெரிக்காவின் சமீபத்திய அறிவிப்பு. அதிபர் ட்ரம்ப்பின் எரிசக்தி கொள்கையினால் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி உச்சத்தை எட்டியுள்ள நிலையில், திடீரென இந்தியாவுக்கு ஒரு 'சலுகையை' வாரி வழங்கியிருக்கிறது அமெரிக்க கருவூலத் துறை.

India US

அது என்ன 30 நாள் கெடு?

கடலில் தவித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய எண்ணெயை மட்டும் இந்தியா வாங்கிக்கொள்ளலாம் என்றும், அதற்கு வெறும் 30 நாட்கள் மட்டுமே 'விலக்கு' (Waiver) அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா 'அனுமதிக்கிறது' (Allow) என்கிற வார்த்தைதான் இப்போது பற்றி எரிகிறது.

இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள காரசாரமான விமர்சனங்களின் தொகுப்பு இதோ:

79 ஆண்டுகால சுதந்திரம் எங்கே போனது? சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, நாம் எதை வாங்க வேண்டும், யாரிடம் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது வெறும் வர்த்தகம் அல்ல, இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் எனப் பலரும் கொந்தளிக்கின்றனர்.

அமெரிக்கா 'அனுமதிக்கிறது' (Allow)

அடகு வைக்கப்பட்ட தேசம்: "மோடி அரசு நாட்டின் கௌரவத்தை மொத்தமாக அடகு வைத்துவிட்டது" என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து பலமாக எழுகிறது. அமெரிக்கா அனுமதி கொடுத்தால் தான் இந்தியாவுக்கு பெட்ரோல் கிடைக்குமா என்கிற கேள்வி சாமானிய மனிதனின் மனதிலும் எழுந்துள்ளது.

யார் இந்த அமெரிக்கா? இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் என்ன? "யார் அமெரிக்கா நமக்கு 'அலௌ' (Allow) செய்ய?" என்கிற ஒற்றை கேள்வி இப்போது தேசபக்தியின் அடையாளமாக மாறிவிட்டது.

ட்ரம்ப்பின் கணக்கும்.. இந்தியாவின் நெருக்கடியும்..

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சிபிஎம் எம்பி சு வெங்கடேசன், ஆகியோர் ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு. என்று விமர்சனங்களை வைத்துள்ளனர்.

ஈரான் உலக எரிசக்தி சந்தையை முடக்கப் பார்ப்பதாகக் கூறி, அதற்கு மாற்றாக அமெரிக்க எண்ணெயை இந்தியா அதிக அளவில் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது. "நாங்கள் 30 நாள் டைம் தருகிறோம், அதற்குள் ரஷ்ய எண்ணெயை ஓரங்கட்டிவிட்டு எங்களிடம் வாருங்கள்" என்பதே வாஷிங்டனின் 'டீல்'.

ஆனால், இது இந்தியாவை ஒரு 'வாடிக்கையாளர்' போல நடத்தாமல், ஒரு 'அடிமை நாடு' போல நடத்துவதாக இருக்கிறது என்பதே நடுநிலையாளர்களின் வருத்தம். வல்லரசு கனவில் இருக்கும் இந்தியாவுக்கு, இது ஒரு ராஜதந்திர சறுக்கலா அல்லது நிர்ப்பந்தமா?

"இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய யாரோ ஒருவரிடம் கையேந்தும் நிலை என்பது நமது வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு."

அமெரிக்காவின் இந்தத் தற்காலிக சலுகை, இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதிக்குமா அல்லது மோடி அரசு இதற்குப் பதிலடியாக என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு இந்தியாவுக்குத் தேவை பெட்ரோல் மட்டுமல்ல... சுயமரியாதையும் தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+