ஊட்டி அருகே சொகுசு விடுதியை தேடி விருந்துக்கு போன யானை.. பல முறை கதவை தட்டி.. அடுத்து ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: வீடு தேடி வந்த விருந்தாளியை விரட்டி விடாதீங்கப்பா.. எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன் ஒருத்தனாவது வந்து திறக்குறானா பாரு.. கல் நெஞ்சக்காரனுங்க.. என்று கடுப்பில் ஒரு யானை காத்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நீலகிரியில் தனியார் தங்கும் விடுதியின் கதவுகளை தட்டியபடி ஒற்றை காட்டு யானை உலா வந்து கிலியை ஏற்படுத்தி உள்ளது.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் மற்ற எல்லா மாவட்டங்களையும் விட வித்தியாசமானது. தட்ப வெப்ப நிலை, காடுகள், மக்களின் கலாச்சாரம், விவசாயம் எல்லாமே வேறுபட்டது. தமிழ்நாட்டில் முற்றிலும் மலையில் உள்ள மாவட்டம் என்றால் அது நீலகிரி மாவட்டம் தான். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் இதமான கால நிலை நிலவும்.

tour ooty Nilgiris

ஏசியே தேவைப்படாத மாவட்டமாக நீலகிரி இருப்பது, பசுமையான காடுகள், வனவிலங்குகள், அருவிகள், நீரோடைகள், படகு சாவரிகள், பூங்காக்கள், தேயிலை தோட்டங்கள், முத்தமிட்டு செல்லும் மேகக்கூட்டங்கள் என அங்கு பருவ நிலையே வேறு என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த பகுதியாக நீலகிரி மாவட்டம் இருக்கிறது.

இதன் காரணமாக உதவை, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி, கூடலூர் உள்பட நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரிசார்டுகள் அதிகமாக உள்ளன. வீடுகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள்அதிக அளவில் கட்டப்பட்டடுள்ளன. வனப்பகுதி, மலைகள், தேயிலைத் தோட்டங்களை அழித்து சொகுசு விடுதிகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுவது கடந்த20 வருடங்களில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக யானைகளின் வழித்தடம் அளிக்கப்படுவதால் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாகக் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது.

இதன் காரணமாக மனித வனவிலங்கு மோதல் அதிகரித்து நீலகிரி மாவட்டத்தில் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை அளிக்கும் வகையில், தேயிலைத் தோட்டங்கள் நடுவே கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது என்கிறார்கள் உள்ளூர் மக்கள். தேயிலைத் தோட்டங்களை அழித்தும், மலையைக் குடைந்தும், பாறைகளை உடைத்தும் சொகுசு விடுதிகள் கட்டப்படுவதாகவும் புகார்கள் உள்ளது.

இதுபோன்ற காரணங்கள் மற்றும் யானைகள் வழித்தடம் அழிப்பு, யானைகள் செல்லும் வழிகளில் வீடுகள் கட்டிடங்கள் அதிகரித்துள்ளால், யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒன்றை காட்டு யானை ஒன்று லகிரியில் தனியார் தங்கும் விடுதியின் கதவுகளை தட்டியபடி நீண்ட நேரம் நின்ற வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவை பார்க்கும் போது, வீடு தேடி வந்த விருந்தாளியை விரட்டி விடாதீங்கப்பா.. எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன் ஒருத்தனாவது வந்து திறக்குறானா பாரு என்று யானை கேட்பது போல் இருக்கும். யானை ஒரு கட்டத்தில் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்வதாக வீடியோ முடிகிறது. காட்டு யானை நள்ளிரவில் சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+