வாழ்க்கையில் எல்லாரும் ஒரு தடவை இதில் போயிட்டு வந்தால் முதுகு வலியே வராது.. திரில் சாகச பயணம்
சென்னை: வாழ்க்கையில் எல்லாரும் ஒரு தடவை இதில் போயிட்டு வந்தால் நன்றாக இருக்கும். முதுகு வலி, மூட்டுவலி ஒன்றுமே வராது என்று கூறி நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜீப் ஒன்று அபாயகரமான முறையில் ஓட்டி பரிசோதிக்கப்பட்டது. அவ்வளவு மோசமான மலை சாலையிலும் வாகனம் சிறப்பாக கடந்து கீழே வரும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளார்கள்.
பலருக்கு வாகனங்களில் பயணிப்பது பிடிக்கும். குறிப்பாக மலைச்சாலையில் சாகச பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். மலைச்சாலைகளை பொறுத்தவரை, சரியாக சாலை வசதிகள் இருக்காது. மிகவும் சவாலான முறையில் மேடு பள்ளமாக சாலைகள் இருக்கும். சில இடங்களில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடும். சில இடங்களில் மிகவும் பள்ளமாக இருக்கும். சில இடங்களில் மிகவும் செங்குத்தான பாதையாக இருக்கும். இப்படியான பாதைகளில் பொதுவாக டிராக்டர் மற்றும் ஜீப்கள் அதிகமாக செல்லும்.

குறிப்பாக ஜீப்கள் மலைகளில் அபாயகரமான சாலைகளில் அசால்டாக செல்லும். ஜீப்கள் என்றாலே மலைகளுக்குத்தான் என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு ஜீப்களும் மலையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. கேரளாவின் தேக்கடி மற்றும் மூணாறை சுற்றியுள்ள கொழுக்குமலை தேயிலைக் காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஜீப்பில் தான் போக முடியும். அதேபோல் கொடைக்கானலில் சில பகுதிகளுக்கு ஜீப்பில் செல்வதே சிறப்பானதாக இருக்கும். ஊட்டி மற்றும் மஞ்சூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் செல்லும் போதும் ஜீப்பில் செல்வதே சிறப்பானதாக இருக்கும்.
வாழ்க்கையில எல்லாரும் ஒருதடவை இதுல போயிட்டு வந்தா நல்லா இருக்கும். முதுகு வலி மூட்டுவலி ஒன்னும் வராது😂😂 pic.twitter.com/wQsNULADcb
— ராட்சசி 2.0 🐝🐝 (@imthattaan) August 28, 2024
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மலை மற்றும் காடுகளுக்கு உள்ள பகுதிகளில் செல்ல ஜீப்தான் வசதியாக உள்ளது. ஜீப்களை பொறுத்தவரை அது எப்படி செல்லும் என்பது குறித்து அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆஃப் ரோட்டில் போக வைத்து சோதிப்பார்கள். அப்படித்தான் ஜீப் ஒன்றை அனுபவம் உள்ள வாகன ஓட்டியை ஓட்ட வைத்து சோதித்துள்ளார்கள்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் செங்குத்தான பாதையில் தலைகீழாக வாகனம் வருகிறது. வரும் வழியில் ஜீப்பையே மூழ்கடிக்கும் வகையில் பள்ளங்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு பள்ளத்திலும் விட்ட பின்னரும் வாகனம் மேல்நோக்கி வருகிறது. இதை ஓட்டிய ஜீப் டிரைவருக்கு நிச்சயம் அசாத்தியமான திரில்லான அனுபவம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். வாழ்க்கையில எல்லாரும் ஒரு தடவை இதில் போயிட்டு வந்தால் நன்றாக இருக்கும். முதுகு வலி, மூட்டுவலி ஒன்றுமே வராது என்று கிண்டலாக கூறியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications