வீசும் காற்றில் பரவிய விஷம்! அப்படியே மயங்கி சரிந்த பெண்கள்! சென்னை கொடுங்கையூரில் ஷாக்! என்னாச்சு?
சென்னை : கொடுங்கையூரில் கெமிக்கல் கம்பெனியில் ஏற்பட்ட வாயு தாக்குதலில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் லட்சுமி அம்மன் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கொடுங்கையூர் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் பாலாஜி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் சொலுயூஷன் தயார் செய்யும் கம்பெனியை நடத்தி வருகிறார்.
இந்த கம்பெனியில் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த தேன்மொழி, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமுதவல்லி ஆகிய இரண்டு பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

விஷ வாயு
நேற்று இரவு 11 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தபோது சொலுயூஷன் நிரப்பப்பட்ட டரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டு திரவம் மொத்தமாக வெளியேறியது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த வெங்கடேசன் அமுதவல்லி தேன்மொழி ஆகியோர் வாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தனர்.

அதிர்ச்சி சம்பவம்
அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியே நின்று இருந்த தேன்மொழியின் மகன் சுரேஷ் 38 என்பவர் அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கும் முல்லை நகர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தேன்மொழி மற்றும் அமுதவல்லி ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை
சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கெமிக்கல் அடைக்கப்பட்டிருந்த டிரம்மை திறக்கும் போது அது உடைந்து கெமிக்கல் முழுவதும் பரவியதில் மூச்சுத் திணறலால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications