விடிய விடிய கனமழை.. சுருளி அருவியில் கடும் வெள்ளம்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், இரவு முழுவதும் விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கின் அருகே அமைந்திருக்கும் சுருளி அருவி, இயற்கை அழகுடன் ஆன்மீகப் பெருமைகளும் ஒருங்கே அமையப் பெற்ற புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்குள்ள பூதநாராயண சுவாமி திருக்கோயில், சுருளி வேலப்பர் கோயில், மற்றும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான தர்கா ஆகியவை இருப்பதால், இது ஒரு மத நல்லிணக்க மையமாகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது.

குறிப்பாக சுருளி அருவிக்கு அருகில் உள்ள சுருளி வேலப்பர் கோயில் மிகப்புகழ் பெற்றது. இக்கோயிலின் அருகே உள்ள கைலாய குகையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சித்தர்களும் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தக் குகைக்குள் நுழைந்து தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள விபூதி குகையில், ஈர மண் காய்ந்ததும் இயற்கையாகவே விபூதியாக மாறுவது வியப்புக்குரிய ஒரு அதிசயமாக மக்களால் பார்க்கப்படுகிறது .
சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இரண்டு கட்டங்களாக விழும் இந்த சுருளி அருவியின் காட்சியும், அடர்ந்த வனப்பகுதியும் மனதுக்கு இதமளிக்கும் இயற்கைச் சொர்க்கமாகும். இங்கு வந்து குளித்து, புத்துணர்ச்சி பெறுவதும், சுற்றியுள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதும் பக்தர்களின் வாடிக்கையாகும் .
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சுருளிமலையில், சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய மூன்று மூலிகை நீரோடைகள் சங்கமிக்கின்றன. இந்த அருவி நீரில் குளிப்பது உடல் பிணிகளை நீக்கி, புத்துணர்ச்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த இயற்கை மூலிகை நீரின் மகத்துவம்தான் பலரையும் ஈர்க்கும் முக்கியக் காரணமாகும்.
சுருளி அருவியில் வெள்ளம்
நேற்று இரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்புப் பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததன் விளைவாக, வனப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேகமலை, இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, காட்டாறுகள் மற்றும் நீரோடைகள் அனைத்தும் சுருளி அருவியுடன் சங்கமித்து, அருவியில் வெள்ளம் சீறிப் பாய்ந்து கொட்டுகிறது. நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், பயணிகள் குளிப்பதற்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
வனத்துறையினரின் எச்சரிக்கை:
வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் முற்றிலுமாகத் தடை விதித்துள்ளனர். கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள், "கனமழை பெய்து வருவதால் அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சபரிமலை யாத்திரைக்காக கம்பம் வழியாகச் செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்தத் தடை, அருவியின் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications