அடுத்த 2 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர், சேலம் உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், சேலம் உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செய்யூர், மதுராந்தகம் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரள கடலோரப் பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

rain weather chennai

இதேபோல் சென்னை முதல் குமரி வரை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக நேற்று தென்காசி மாவட்டத்தில் பரவலாக வெயில் அடித்தாலும், மாலை 4 மணியளவில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ள நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அடுத்த 2 மணி நேரத்தில் செய்யூர், மதுராந்தகம் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+