டிட்வா புயல் இன்னும் கரையை கடக்கல.. சென்னையை நோக்கி திரண்டு வரும் மேகங்கள்.. வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: தற்போது தீவிர மேகக்கூட்டங்கள் சென்னை நகர் பகுதிக்குள் நகர்ந்து வருவதால், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பில், தற்போது தீவிர மேகக்கூட்டங்கள் சென்னை நகர் பகுதிக்குள் நகர்ந்து வருவதால், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னைக்கு ஏற்படும் கனமழையின் தாக்கம் இன்றுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
டிட்வா புயல் மூலம் எண்ணூர் சுமார் 500 மி.மீ. மழையைப் பெற்றுள்ளது. நவம்பர் 30, 2025 அன்று 51 மி.மீ., டிசம்பர் 1, 2025 அன்று 49 மி.மீ., டிசம்பர் 2, 2025 அன்று 260 மி.மீ., மற்றும் டிசம்பர் 3, 2025 அன்று 144 மி.மீ. மழை அங்கு பதிவாகியுள்ளது.
இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழைப்பொழிவு அமையும் நாள். நகரும் குறைந்த அழுத்தத் தாழ்வு மண்டலத்தின் ஈரப்பதம் மாநிலம் முழுவதும் பரவி, பரவலான மழைக்கு வழிவகுக்கும். பெங்களூருவிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கில் கோவை, தெற்கில் நெல்லை, கிழக்கில் டெல்டா மாவட்டங்கள், மத்தியப் பகுதிகளில் சேலம்/திருச்சி என அனைத்துப் பகுதிகளும் இன்று மழை பெறக்கூடும். தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், மாவட்டங்களுக்குள் சில இடங்களில் மழை பெய்யலாம், சில இடங்களில் பொழிவு இருக்காது.
டிட்வா புயல் இன்னும் கரையை கடக்கவில்லை
வங்கக் கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்தாலும், அது முழுமையாக இன்னும் கரையைக் கடக்கவில்லை. இதனால், கே.டி.சி.சி பகுதிகளில் (சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்) இன்று இரவு வரை மழைப்பொழிவு தொடரும்.
சென்னையைச் சூழ்ந்து மேகங்கள் திரண்டுள்ளன. சென்னைக்குத் தெற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால், மழைக்கான ஒருங்கிணைப்பு இப்பகுதிகளில் வலுவாக உள்ளது. காற்றழுத்த சுழற்சி தெற்கே இருக்கும் வரை, கே.டி.சி.சிக்கு தொடர்ச்சியான மழைப்பொழிவு கிடைக்கும். ஆகவே, இன்று இரவு வரை மழை தொடரும்; இது உடனடியாக முடிவடையாது.
இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏற்படும் ஈரப்பதம் மாநிலம் எங்கும் பரவி, அனைத்து மாவட்டங்களுக்கும் மழை தரும். பெங்களூருவிலும் இன்று மழை எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை (மேற்கு), நெல்லை (தெற்கு), டெல்டா (கிழக்கு), சேலம்/திருச்சி (மத்திய) உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் இன்று மழை பெறும். ஒரு குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநிலமும் மழை பெறத் தயாராக உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
சென்னை கனமழை
இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிட்வா புயல் ஏற்கனவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று இரவு நெல்லூர் அருகே நிலப்பகுதியைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி,திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications