டிட்வா புயல்.. கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை: டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி, பாம்பன், கடலூர், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களிலும் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 2ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புடல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 430 கிமீ தூரத்தில் மையமிட்டுள்ள டிட்வா புயல், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை டிட்வா புயல் வடதமிழகம், புதுச்சேரி கடற்கரையை அடையும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த புயல் நெருங்கி வரும் சூழலில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால், சாமானிய மக்கள் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வழக்கமாக புயல் உருவாகி கடலோரப் பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும் போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். மொத்தமாக 1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு விளக்கம் இருக்கின்றன.
பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளும், இரவில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்படும். அந்த வகையில் கடலூர் துறைமுகத்தில் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 4ஆம் எண் கொண்ட புயல் எச்சர்க்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து மற்றும் மோசமான வானிலை நிலவுவதை குறிக்கிறது.
இதேபோல் பாண்டிச்சேரி துறைமுகத்திலும் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் உருவாகி இருப்பதை எச்சரிக்கை செய்வதற்காக ஏற்றப்படுவதாகும். இந்த எச்சரிக்கை வந்தால், துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன.
அதேபோல் தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்றே 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களிலும் இதே நிலைதான் உள்ளன. இதனால் அதிகளவிலான மழை பெய்வதோடு சில பாதிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications