ஏடாகூடமாகும் எல் நினோ.. இந்தாண்டு மழை அவ்வளவு தானா? பசிபிக் கடலில் பதற வைக்கும் வெதர்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகளாவிய காலநிலை மாற்றங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் 'எல் நினோ' சூழல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் புவி அமைப்பு அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளன. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

பொதுவாக 'எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு காலநிலை நிகழ்வாகும். உலகளாவிய காற்றோட்டம் மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு, பல நாடுகளில் மழையை நேரடியாக பாதிக்கும்.

weather El Nino Monsoon

சில பகுதிகளில் கடுமையான வறட்சியையும், மற்ற சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளையும் உருவாக்கும் தன்மை இதற்கு உள்ளது. ஐஎம்டியின் சமீபத்திய கண்காணிப்புகளின்படி, பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்தில் எல் நினோவுக்கான அறிகுறிகள் தற்போது காணப்படுகின்றன.

எல் நினோ

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இயல்பான நிலையில் இருந்த பசிபிக் கடல் சூழல், பின்னர் 'லா நினா' எனப்படும் குளிர்ச்சியான நிலைக்கு மாறியது. அதன் பிறகு மீண்டும் கடல் வெப்பநிலை உயரத் தொடங்கி தற்போது எல் நினோ நிலையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. பசிபிக் பெருங்கடல் மட்டுமின்றி, இந்தியாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

பருவமழை

இந்த சூழல் தொடர்ந்து நீடித்தால், ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் பரவல் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். பொதுவாக இந்தியாவில் எல் நினோ வலுவடையும் ஆண்டுகளில் பருவமழை குறைவாக பதிவாகும். இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக மழையை நம்பி விவசாயம் செய்யும் மாநிலங்களில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல்

இதற்கிடையில், இந்தியப் பெருங்கடல் டைபோல் எனப்படும் மற்றொரு முக்கிய காலநிலை அமைப்பு தற்போது நடுநிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதி இடையிலான வெப்பநிலை வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, இந்திய பருவமழைக்கு சாதகமான சூழலை உருவாக்கக்கூடியது. பல சமயங்களில் எல் நினோவின் எதிர்மறை தாக்கத்தை ஓரளவு குறைக்கும் திறன் இதற்கு உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் டைபோல் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெறவில்லை.

காலநிலை மாற்றம்

அது தொடர்ந்து நடுநிலையாகவே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எல் நினோவின் தாக்கத்தை சமாளிக்கக்கூடிய இயற்கை ஆதரவு குறைவாக இருக்கலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், பருவமழை முழுமையாக பாதிக்கப்படும் என்று இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும், அடுத்த சில வாரங்களில் கடல் வெப்பநிலை மற்றும் வளிமண்டல மாற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

எல் நினோவின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில், பருவமழை மற்றும் மழைப்பொழிவு அளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை குறித்து விவசாயிகள், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் அரசுகள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றன. எல் நினோ தான் வரும் காலத்தில் இந்தியாவின் மழை நிலவரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+