Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பவம் லோடிங்.. வாழ வைக்குமா வடகிழக்கு பருவமழை? 16க்கு அப்பறம் பாருங்க! டெல்டா வெதர்மேன் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததும் சில நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வானம் வறண்டு காணப்பட்டது. இதனால் இந்தாண்டு பருவமழை பலவீனமானதா? என்ற கேள்வி எழுந்தது. நவம்பரின் இரண்டாவது பாதியில் அதாவது நவம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு மழை பெருமளவில் பெய்ய வாய்ப்புள்ளது என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும்.

weather northeast monsoon Tamil Nadu rain

அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது. ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லலாம்.

வடகிழக்கு பருவமழை

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை மிகக் குறைவாகவே இருக்குமோ என பொதுமக்கள் கவலை அடைந்தனர். ஆனால் மழை குறைந்தது பற்றி கவலைப்பட தேவையில்லை என நவம்பர் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பேசி உள்ள சுயாதீன வானிலை ஆய்வாளரான 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்திரன், வடகிழக்கு பருவமழையின் போது சில நாட்கள் மழை குறைவது சாதாரண விஷயம் தான். இந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் பலம் பெற்று மழை பெய்யும்.

தமிழ்நாடு மழை

நவம்பரின் இரண்டாவது பாதி பருவமழைக்கு மிகச்சிறந்த சூழ்நிலை கொண்டுள்ளது. வரும் வாரங்களில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் முதல் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட மழை பற்றாக்குறை இரண்டாம் பாதியில் சரியாகி விடும். சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் சராசரியாக 11 நாட்களுக்கு மழை இருக்கும். நுங்கம்பாக்கம் பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யும். இம்முறை வரவிருக்கும் வானிலை மாற்றங்கள் அந்த இலக்கை எளிதாக அடையச் செய்யும்." என்றார்.

சென்னை கனமழை

"MJO" எனப்படும் மேடன்-ஜூலியன் ஒசிலேஷன் பற்றியு கவலைப்பட தேவையில்லை. நவம்பர் 22க்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் புதிய MJO அலை உருவாகும். இது பருவமழைக்கு மீண்டும் சக்தி அளிக்கும். வடகிழக்கு காற்று முழுமையாக வந்தடைந்துள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் தென்கிழக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை மீண்டும் துவங்கும். நவம்பர் 15 முதல் 20 வரை, கிழக்கத்திய அலையுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதன் விளைவாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பரவலான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பருவமழை கணிப்பு

அதனைத் தொடர்ந்து நவம்பர் 21 முதல் டிசம்பர் 3 வரை, தெற்கு வங்கக்கடலில் இரண்டு வானிலைச் சலனங்கள் உருவாகும் எனவும், அவை மாநிலத்தின் தென்பகுதிகளுக்கு தொடர்ந்து மழை கொடுக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கவலையின்றி இருங்கள். நவம்பரின் இரண்டாவது பாதி கண்டிப்பாக மழைக் கொடுக்கும். இந்தாண்டு பருவமழை நம்மை ஏமாற்றாது என உற்சாகமாக கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+