Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழை வார்னிங்.. சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. கலெக்டர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நேற்று காலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், நேற்று இரவு தொடங்கி, விடிய விடிய பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்றும் இதன் காரணமாக டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Holiday for schools in Chennai today due to heavy rain warning Collector orders

அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது.

வானிலை மையத்தின் எச்சரிக்கை ஒருபுறம் எனில் வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய பரவலாக விட்டு விட்டு கனமழை முதல் மிககனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை கனமழை பெய்தது. இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள சூழல் மற்றும் கனமழை பெய்து வரும் காரணத்தால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+