சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் பெஞ்ஜல் புயல்.. கரையை நடக்கும் போது எப்படி இருக்கும்?
சென்னை: தமிழ்நாட்டை நெருங்கி வரும் பெஞ்ஜல் புயல் இப்போது எங்கு மையம் கொண்டுள்ளது என்பதையும், அந்த புயல் கரையை கடக்கும் போது எப்படி இருக்கும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம். இந்த புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான பெஞ்சல் புயல் (ஃபெங்கல்) சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 210 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த புயல் இன்று ( நவம்பர் 30ஆம் தேதி ) பிற்பகலில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் சூறாவளி புயலாக மாறி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி இடையே கடற்கரையை கடக்கும்" என்று கணித்துள்ளது.

இதனிடையே காலை 6 மணி நிலவரப்படி புயல் புதுச்சேரியில் இருந்து சரியாக 180 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் பெஞ்சல் புயல் இருப்பதாகவும் புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல் நெருங்கும் போதும், புயல் கரையை கடக்கும் போதும், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர விழுப்புரம் மாவட்ட மக்கள் தயவு செய்து வெளியே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுமார் 190 தொலைவில் பெஞ்சல் புயல் இருக்கும் நிலையில், அதன் அடர்த்தியான மழை மேகங்கள் இன்னும் நமது கடற்கரையைத் தொடவில்லை என்றும் சூறாவளி சென்னை நோக்கி மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதே நேரத்தில் வேகமாக தீவிரமடைந்து வருகிறதும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சென்னையை நெருங்கும் போது, மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
பெஞ்ஜல் புயல் கரையை கடக்கும்போது பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் மழை அதிகமாக காணப்படும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புயல் கரையேறும்போது மேலும் வலுவடைந்து, தீவிர புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், மேலும் கரையை கடக்கும் போது சில மணி நேரங்கள் நின்று கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறினார்.
மேலும் அவர்கூறும் போது, புயல் கரையை கடக்கும் நேரத்தில் கரையை கடக்கும் பகுதிகளில் அதி கனமழையும், குறுகிய நேரத்தில் பெருமழையும் பதிவாகும். அதாவது 30 முதல் 35 செ.மீ. வரை மழை இருக்கும். சென்னை முதல் விழுப்புரம் வரையிலான பகுதிகளில் உள்ள மக்கள் புயல் கரையை கடக்கும் வரை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று எச்சரித்தார்.
மேலும் ழ்வான மற்றும் நீர்நிலைகள் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தவேண்டாம் என்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்றும் எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வைப்பது அவசியம் என்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தண்ணீர் தேங்கும் என்பதால் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும் ஹேமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications