Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வெள்ளம் சூழ், வெப்பம் சூழ்ந்த நகரமாக இருக்கும்.. எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் இன்று அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை நிரந்தரமாக வெள்ளம் சூழ், வெப்பம் சூழ் நகரமாக மாறிவிடும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் சென்னை மக்களுக்கு படிப்பினையை கொடுத்தது. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளாக சென்னையை மழை வெள்ளம் பதம் பார்த்துதான் வருகிறது. இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் சென்னை குறித்த பகீர் எச்சரிக்கையை பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதாவது,

cyclone fengal weather poovulagin nanbargal

"சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு, இங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே முதன்மையான காரணம் என 'நீரி' உள்ளிட்ட அமைப்புகள் செய்த ஆய்வறிக்கை சொல்கிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் நீர்தேங்காமல் ஓடிச் செல்வது (run off water) அதிகமாகி சென்னையில் வெள்ளம் ஏற்படுவதாக இந்த அறிக்கை சொல்கிறது. அதுவும் 2015சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் இந்த ஆக்கிரமிப்பு அதிகமாக தொடர்வதாகவும் இந்த ஆண்டும் இது அதிகரிக்கும் என்று சொல்கிறது.

2015 ஆம் ஆண்டு 119 நீர்நிலைகளில் இருந்தது, 2020 ஆம் ஆண்டு 64ஆக குறைந்தது, இந்த ஆண்டு 62ஆக குறையும் என்று சொல்கிறது, அதாவது, 101 சது.கிமீ ஆக இருந்த நீர்நிலைகள் இப்போது 64சது.கிமீ ஆக குறைந்துள்ளது.

இப்படி நீர்நிலைகள் குறைந்துவருவதன் தாக்கத்தை சென்னை ஒவ்வொரு ஆண்டும் அனுபவித்துவருகிறது. நீர்நிலைகள் வெறும் நீரை தேக்கிவைக்கமட்டுமல்ல, நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மட்டும் 'micro climatic conditions' என்று சொல்லக்கூடிய வகையில் அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும், இது சென்னையை வெப்பத்திலிருந்து காப்பாற்ற உதவும்.

பரந்தூர் விமான நிலையத்தை நாங்கள் எதிர்ப்பதற்கு, மிகப்பெரிய நீர்நிலைகளை அழித்து உருவாக்க முயல்வது ஒரு முக்கியமான காரணம். இந்த 13 நீர் நிலைகள் மட்டுமல்ல, விமான நிலையம் கொண்டுவரக்கூடிய "வளர்ச்சி", அதவது நட்சத்திர விடுதிகள், மால்கள், அலுவலக வளாகங்கள் என் அந்த விமான நிலையத்தை சுற்றியுள்ள நீர்நிலைகள் காவு வாங்கப்படும். சென்னை நிரந்தரமாக வெள்ளம் சூழ், வெப்பம் சூழ் நகரமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே சென்னை குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சுந்தரராஜனின் வார்னிங் சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் கவனம் பெற்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+