நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழையால் புதுச்சேரி - காரைக்கால் மாணவர்களுக்கு குட்நியூஸ்
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புயல் கரையை கடந்தது. அப்போது பலத்த மழை பெய்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை தீவிரமெடுத்திருக்கிறது. இன்று சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போது வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும் கூட அது நகர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications