அடுத்த 3 மணி நேரம்.. நாகை முதல் ராமநாதபுரம் வரை.. 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. டெல்டா, கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் நேற்று அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 4 செமீ மழையும், புதுச்சேரியில் 3.2 செமீ மழையும் பதிவானது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

குறிப்பாக வரும் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, தஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications