மிக கனமழை எச்சரிக்கை.. மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்றிருக்கிறது. இதனால் இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது சில நேரங்களில் புயலாக வலுப்பெற்று தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவை கொடுத்துவிடுகிறது. சில நேரங்களில் இந்த மழை வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வட கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை கொடுத்தது. இதனால் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. கடந்த டிச.9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு தொடங்கி தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
எனவே இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications