லேசான மழை + அதிக குளிர்.. தமிழகத்தில் அடுத்த 2 நாள் வெளியே போகவே முடியாது! வானிலை மையம் மேஜர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. அதேநேரம் பெரும்பாலான இடங்களில் குளிர் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து எச்சரித்துள்ள வானிலை மையம், எங்கெல்லாம் மழை இருக்கும், எங்குக் குளிர் அதிகமாக இருக்கும் என்பது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

weather chennai tamil nadu

மழை எங்கே:

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து (திருநெல்வேலி), நாதூமுக்கு இருநெல்வேலி) தலா 60 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், காக்காச்சி (திருநெல்வேலி) 5, மாஞ்சோலை (திருநெல்வேலி] 40 மிமீ மழையும், தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 20 மிமீ மழையும் பெய்துள்ளது. இது தவிர கோவில்பட்டி (தூத்துக்குடி), பெரியாறு அணை (விருதுநகர்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சூரங்குடி (தூத்துக்குடி), கடலாடி (ராமநாதபுரம்) தலா 10 மிமீ மழை பெய்துள்ளது.

வரும் நாட்களில் கிளைமேட்:

வரும் நாட்களில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜனவரி 23) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜனவரி 24ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 25 முதல் 27 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 28, 29 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+