இன்னும் மழை முடியல.. சென்னை + 22 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரத்திற்கு உஷார்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து வெயில் பொளக்க தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் வானிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 23 மாவட்டங்களுக்கு வானிலை மையம், லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது.
விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.

தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வெலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக விடுக்கப்பட்ட அறிவிப்பில், "அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை,
தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.4 முதல் 8 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று (02-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் சென்னையில் கடுமையாக வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications