Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்க கடலில் ’மயிலிறகு’ சென்னைக்கு ஒரு நல்ல செய்தி.. கெட்ட செய்தி! தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்றாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், அதன் பிறகு கேடிசிசி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் 28ஆம் தேதிக்கு பிறகு வெயில் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

Tamilnadu weatherman predicts heat will increase after rain in Chennai

அதிகாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கும் மக்கள் கூட அதீத வெப்பத்தை உணர்ந்தனர். காலை 7 மணிக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பெண்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்.

கோடை மழை: இந்த நிலையில் தான் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது கோடை மழை. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சொன்னது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன்: காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் அக்னி வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் எனவும், அதன் பிறகு வெயில் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

நல்ல மழை: இதுதொடர்பான அவரது பதிவில்,"திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, தருமபுரி, வால்பாறை, சேலம், ராமநாதபுரம், ஈரோடு ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மே மாதத்தில் வெயில் சதம் அடித்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்வது வரவேற்கத்தக்கது. உள் மாவட்டங்களில் இது இன்னும் முடிவடையவில்லை. இதற்கென ஒரு தனி அப்டேட் கொடுக்கப்படும்.

Tamilnadu weatherman predicts heat will increase after rain in Chennai

கேடிசிசியில் எப்படி?: கேடிசிசி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளை பொறுத்தவரை, சென்னையில் வழக்கம் போல் கடலோரப் பகுதியில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இந்த போக்கு கடந்த 4-5 நாட்களாக நடந்து வருகிறது. இதே நிலை 23.05.2024 வரை மேலும் 2 நாட்களுக்கு தொடரும். அடுத்த 2 நாட்கள் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்கு பிறகு மே 28 ஆம் தேதிக்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் வெப்பம் திரும்பும். இந்த மே மாதம் சென்னை மாநகரில் ஒரு முறை கூட 40° C பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே நடந்த மே 40 C குறைந்தால் தப்பிக்க முடியுமா?" என கூறியுள்ளார்.

மழை அளவு: மேலும் அப்பகுதிகளில் இன்று ( 21.05.2024) பதிவான மழை விவரங்களையும் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். அதன்படி, கத்திவாக்கம் - 24, மணாலி - 22, தண்டையார்பேட்டை - 19, ஆவடி - 18, எண்ணூர் - 18, சென்னை கலெக்டர் அலுவலகம் (பாரிஸ்) - 17, பெரம்பூர் - 16, மாதவரம் - 15, ராயபுரம் - 12, திரு.வி.க. நகர் - 10, உத்திரமேரூர் - 10, மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+