தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை.. வானிலை மையம் அப்டேட்! பள்ளி மாணவர்களே அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை மழை பெய்யும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாகவே நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது இன்று அதிகாலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை காலையும் கனமழை தொடரும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை மழை பெய்யவில்லை என்றாலும், குழந்தைகளுக்கு ரெயின் கோட், குடை உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையுடன் கொடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications