வங்கியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்தாலே போதும்! ஆரம்பமே 37 ஆயிரம் சம்பளம்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: ஃபெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமே ரூ.37 ஆயிரம் வழங்கப்படும். இது ஒரு நிரந்தர பணியிடமாகும்.
இந்தியாவில் இயங்கி வரும் தனியார் வங்கிகளில் ஒன்று ஃபெடரல் வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. கேரள மாநிலம் ஆலுவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பணியிடங்கள் விவரம்:
இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது, உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், ஃபெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கல்வித் தகுதி:
* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1.12.2025 அன்று தேதிப்படி 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு:
* வயது வரம்பை பொறுத்தவரை 1.12.2025 அன்று தேதிப்படி 18 முதல் 20 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (அதாவது 1.12. 2005 முதல் 1.12. 2007 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள்).
* SC, ST பிரிவினர் 18 முதல் 25 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும் (அதாவது டிசம்பர் 1, 2000 மற்றும் டிசம்பர் 1, 2007 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள்).
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை கணிதம், ஆங்கிலம், கணினி அறிவு குறித்த கேள்விகள் இடம்பெறும். தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.. விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் சாதி (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்க வரும் 8 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் www.federal.bank.in தளத்தில் சென்று Careers பக்கத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications