டிடிவி தினகரனை சந்திக்க விரும்பாத எடப்பாடி.. பொறுப்பை எடுத்த பாஜக.. நயினார் சந்திப்பின் பின்னணி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற உள்ள டிடிவி தினகரன் கட்சிக்கும் சேர்த்து தங்களுக்கு தொகுதி பங்கீடு செய்ய அதிமுக உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் உட்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்த சூழலில், தற்போது தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், தேர்தல் களத்தில் எதிரி, துரோகி என்று பார்க்க கூடாது. மக்கள் நலனே முக்கியம் என்று பேசி இருந்தார். கடந்த 3 மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், திடீரென யூடர்ன் போட்டது அமமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அமமுகவை என்டிஏ கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவில் சேர்க்கப்பட மாட்டார்கள். இதனை எத்தனை முறை சொல்வது என்று கூறினார்.
ஆனால் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் உட்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதன் மூலமாக என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி என்று பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகி சென்ற டிடிவி தினகரன், தனியாக அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இதனால் தன்னுடைய நாற்காலிக்கு எந்த சிக்கலில் இல்லை என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனாலேயே ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை சேர்ப்பதில் எந்த பிடிவாதமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் டிடிவி தினகரனை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
இதன் காரணமாக அமமுகவுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பையும் பாஜகவே கையில் எடுத்துக் கொண்டது. அமித்ஷா தரப்பில் கேட்கப்பட்ட 56 தொகுதிகளை டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் தரப்பு ஆகியவற்றுக்கு பாஜகவே பிரித்து கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பாஜக குறைந்தது 36 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கான காரணமும் இதுதான் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
நெல்லையில் போட்டியிடாதது ஏன்? "அதிமுக கேட்டாங்க! விட்டுக் கொடுத்துட்டோம்!" நயினார் நாகேந்திரன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications