பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை யாருன்னு கேட்டா அது எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக இளைஞரணி பொதுச்செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார. பத்து தோல்வி பழனிச்சாமி என்று இல்லாமல் மொத்த தொகுதியிலும் பழனிச்சாமியை ஓட விடனும் என்று நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில், திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் கவிதா தண்டபாணி ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்றான மகளிர் உரிமை தொகை 1000 வழங்கப்பட்டு வருகிறது.. தேர்தலில் வெற்றி பெற்றால் 2000 ரூபாயாக வழங்கப்படும் என கூறினார்.

மேலும் ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தி உள்ளோம்.. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எட்டாவது வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படும்.. மேலும் 8000 கொண்ட கூப்பன் வழங்கப்படும்.. அதில் உங்களுக்கு தேவையான டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம் என கூறினார்.
மேலும் அதிமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். திராவிட மாடியில் கல்லூரியில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது என்று லேப்டாப் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்கும் திருப்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி யையும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கவிதா தண்டபாணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உங்களை முதல்வர்களுடைய மகனாகவும் முன்னாள் முதல்வர் பேரனாகவும் கேட்டுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே 3 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டாம் நாளான நேற்று (மார்ச் 31) ஒரே நாளில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தார். திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு, அரூர் சட்டமன்றத் தொகுதியி வேட்பாளர் அ.சண்முகம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனியப்பன், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் , தளி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் , வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சீனிவாசன், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா ஆகியோருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications