Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIRஐ ஆதரிக்கிறோம்.. கோர்ட்டில் சொன்ன அதிமுக! இதை எல்லாம் தள்ளுபடி செய்யணும்! நீதிபதி குட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்க்கும் சிறப்புத் திட்டத்திற்கு (SIR) எதிரான மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை நவம்பர் 26 அன்று நடைபெற இருப்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதிமுகவிற்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.

அதேவேளையில், இடைக்கால உத்தரவாக, வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் திட்டமிட்டபடி தொடரலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, தேர்தல் செயல்முறைகள் தடையின்றி நடப்பதை உறுதி செய்கிறது.

voting vote

SIR மனு - அதிமுக வைத்த குட்டு

விசாரணையின் போது, அதிமுக இந்த வழக்கில் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு, சிறப்புத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக தனி மனு தாக்கல் செய்ய முயன்றது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறை சீராகவும் துல்லியமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே தங்கள் நோக்கம் என்றும், சிறப்புத் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை ஆதரிப்பதாகவும் அதிமுக கூறியது.

ஆனால், நீதிபதிகள் இந்த தலையீட்டின் அவசியத்தை கேள்வி எழுப்பி, "இந்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.. ஏன் இந்த மனுவை தாக்கல் செய்கிறீர்கள்.. இது எல்லாம் தள்ளுபடி செய்யப்பட வேண்டியது" என்று தெரிவித்தனர்.

அதிமுக வழக்கறிஞர், தங்கள் கட்சி சிறப்புத் திட்டத்திற்கு எதிரானதல்ல என்றும், அதன் அமலாக்கத்தில் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் விளக்கமளித்தார். மேலும், தற்போதைய மாநில அரசே இந்த திட்டத்தை எதிர்ப்பது.. இந்த சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளக் கூடாது என்று கூறும் கருத்தை ஏற்க முடியாது" என்று மறுத்தார்.

அதிமுகவின் மனு பிரதான மனுக்களிலிருந்து வேறுபட்ட விஷயங்களை உள்ளடக்கியதால், இரண்டையும் இணைத்தால் குழப்பம் ஏற்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தங்கள் கவலைகளை எழுப்ப விரும்பினால், அதிமுக தனி ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

பின்னர், இது தொடர்பாக வேண்டுமென்றால் தனி மனு தாக்கல் செய்யப்பட்டால் அதைக் கருத்தில் கொள்வதாக அமர்வு அறிவித்தது. சிறப்புத் திட்டத்தின் சட்டபூர்வமான தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கேள்வி கேட்கும் பிரதான மனுக்கள் நவம்பர் 26 அன்று ஒன்றாக விசாரிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

சென்னையில் நீக்கம்

இதற்கு இடையே சென்னையில் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்த பணிகளின் முதல் வாரத்தில், கிட்டத்தட்ட 25% வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடமாற்றம், ஆவணங்களை தர முடியாமல் போனது அல்லது மறைவு போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் புதிய முகவரியில் மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராயபுரம் தொகுதியில், நான்கு நாட்களில் சுமார் 27% படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், சுமார் 400 பெயர்கள் நீக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, 1,500 வாக்காளர்களில் சுமார் 400 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "சுமார் 50 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்," என்றார். சண்முகராயன் தெருவில் உள்ள அதிகாரிகள், 700 வாக்காளர்களில் இதுவரை 150 பேரை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது என்று தெரிவித்தனர்.

அதிகாரிகளில் ஒருவர், "நாங்கள் சென்றபோது பலர் வீட்டில் இல்லை. மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிப்போம்," என்றார். மேற்கு ஜாஃபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, 1,409 வாக்காளர்களைச் சரிபார்க்க தங்கள் குழு 492 படிவங்களை விநியோகித்தது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+