நீட் தேர்வில் சலுகை, காவிரி மேலாண்மை வாரியம் தேவை.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் திட்டவட்டம்
டெல்லி: நீட் தேர்வு ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.
திட்டக்கமிஷனை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான இந்த கூட்டம் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டு, தங்கள் மாநில திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி வலியுறுத்துவார்கள்.

நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர்ர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டார். முதல்வருடன் உயர் அதிகாரிகளும் சென்றனர். முன்னதாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இலங்கை வசமுள்ள 133 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். "கச்சத் தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வாக அமையும். மருத்துவம்,பொறியியல் படிப்புகளுக்கு நீட் பொது நுழைவுதேர்வை கட்டாயமாக்க கூடாது, நீட் உட்பட பொதுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
எரிபொருள், உரம், உணவுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதை ஏற்க முடியாது. பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை தேவைப்படுகிறது. மேலும், பழங்குடியின மாணவர்களுக்கான ரூ.1,882 கோடி உதவித்தொகையை தர வேண்டும், என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கைவிடுத்து பேசினார். முன்னதாக அவர் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications