நாங்கள் என்ன தரம் தாழ்ந்தவர்களா?... பாடை ஊர்வல போராட்டத்தில் அய்யாகண்ணு உருக்கம்
டெல்லியில் விவசாயிகள் 27-ஆவது நாளாக நடைபெற்றும் போராட்டத்தில் பாடை கட்டி, ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் பாடை கட்டி, ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை தொடங்கினர். அப்போது தங்கள் தரம் தாழ்ந்ந்த மக்களாக பார்க்காதீர்கள் என்று அய்யாகண்ணு வேண்டுகோள் விடுத்தார்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலில் 400-க்கும் அதிகமான விவசாயிகள் கட்டாந்தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பு கறி
தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் கடந்த வாரம் எலிக்கறி, பாம்பு கறி உண்ணும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அண்டைய மாநில விவசாயிகளின் மனம் பதை பதைத்தது. எனினும் மத்திய அரசு மனமிறங்கவில்லை.

அரை மொட்டை
பின்னர் வறட்சி நிவாரணம் பாதி வழங்கப்பட்டதை கண்டித்து அரை மொட்டை போராட்டமும், அரை மீசை எடுக்கும் போராட்டத்தையும் முன்னெடுத்து சென்றனர். எனினும் பலன் தரவில்லை.

சாகும் வரை உண்ணாவிரதம்
இந்நிலையில் நேற்று 26-ஆவது நாளாக போராடிய விவசாயிகளில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பிளேடால் கையை அறுத்தும் கொண்டும் போராடினர்.

பாடை கட்டி போராட்டம்
இன்று அவர்களின் போராட்டம் 27-ஆவது நாளை எட்டியது. இதனால் மத்திய அரசின் கவனம் செலுத்தாமையால் விவசாயிகள் உயிரை மாய்த்து கொள்கின்றனர் என்பதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த பாடை கட்டி ஊர்வலமும், ஒப்பாரி போராட்டமும் நடத்தினர்.

தீண்டத்தகாதவர்களா?
அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவிக்கையில், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. எங்களது போராட்டத்தை உயிருடன் இருக்கும் போது தான் மத்திய அரசு கேட்கவில்லை. உயிரைவிட்டால்தான் கேட்கும் என்பதை வெளி்படுத்தும் விதமாக இந்த பாடை கட்டி ஊர்வலம் செல்லும் போராட்டத்தை நடத்துகிறோம். எங்களை தீண்டதகாதவர்களாகவும், தரம் தாழ்ந்தவர்களாகவும் பார்க்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications