20 தமிழர்கள் படுகொலை- விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: 20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆந்திரா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி காட்டுப் பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேர், தர்மபுரியை சேர்ந்த 7 பேர் சேலத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்கள்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் டி.ஐ.ஜி. தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆந்திர மாநில போலீஸ் விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் இருக்கிறது என்று பலியானவர்களின் உறவினர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து போலீசின் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications