ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் கை கோர்ப்பு
டெல்லி: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.
ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி மிக கொடூரமான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் உக்கிரதாக்குதல்களை நடத்தி வருகின்றன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் அடுத்த இலக்காக ஆப்கானிஸ்தான், இந்தியாதான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இயக்கத்தின் விஸ்வரூபத்தை முடக்குவதற்கான சர்வதேச அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை பல்வேறு நாடுகள் நடத்தி வருகின்றன.
அண்மையில் ஹாலந்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இயக்குநர் ஷரத் குமார் பங்கேற்றார். அக்கூட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இளைஞர்கள் இணைவதைத் தடுப்பதற்கான யுக்திகளை அவர் முன்வைத்தார்.
கடந்த செப்டம்பர் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 70 நாடுகளைச் சேர்ந்த 240 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இண்டர்போல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் 3 பேர் பங்கேற்றனர்.
இதேபோல் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, சுவிஸ், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய அரசு இந்த விவகாரத்தில் தொடர்ச்சியான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications