காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு- ஐ.எஸ்., பாக். கொடிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி மற்றும் பாகிஸ்தானின் கொடிகளை ஏந்தி சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது பாகிஸ்தான் கொடி ஏந்தி செல்லப்பட்டு வருகிறது. இது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி இது தொடர்பாக மாநில போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கொடியுடன், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரின் கொடியும் ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்பேரணியில் தங்கள் முகத்தை மூடியவாறு வந்த 2 இளைஞர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கறுப்பு நிற கொடியை தங்கள் கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் சிலர் பாகிஸ்தான் நாட்டு கொடியையும் ஏந்தியிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதனால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.
காஷ்மீரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் மத்திய-மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications