கர்நாடகாவில் இன்று பந்த்... பாதுகாப்பு வளையத்தில் பெங்களூரு - 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் விவசாயிகள் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மகாதாயி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டம்
கன்னட அமைப்புகள் இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பேரணி
முழு அடைப்பு போராட்டத்தின் அடையாளமாக கர்நாடகா சட்டசபையை நோக்கி கன்னட அமைப்புகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் பங்கேற்கின்றன.

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு
பேரணியின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை பெங்களூரு நகர காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சக்கட்ட பாதுகாப்பு
200க்கும் மேற்பட்ட வாகனங்களில் காலை முதலே போலீசார் சுற்றி வருகின்றனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், அலுவலகங்கள்
பள்ளி கல்லூரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நிலைமை மோசமானால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் கூறினர். மேலும் அலுவலகங்களும் இன்று திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி வருகை
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரும் இன்று பெங்களூருக்கு வர உள்ளதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications